தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

புரட்சிக்காரர்களை சந்-தித்-து பேச மூத்-த பிஜி தலை-வர்-க-ள் -திட்-டம்

சுவா:

பிஜி தீவின் தெற்குப் பகுதியைச் சேர்ந்-த மூத்-த தலை-வர்-கள் பிஜி பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் அங்கு புரட்சிக்காரர்கள் மற்றும் ராணுவத்தலை-வர்-க-ளை வெள்ளிக்கிழமை சந்-தித்-திப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

பிஜி தீவில் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடு தலைமையில் புரட்சிக்காரர்கள் அங்கு ஆட்சி புரிந்து வந்த மகேந்திரா பால் செளத்திரியையும், அவரது அமைச்சரவையில்உள்ள 30 பேரையும் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துள்-ளனர். இதையடுத்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. பிணைக்கைதிகளில் ஒருவர் தனதுசகோதரியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக விடுவிக்கப்பட்டார்.

கடந்த மே மாதம் 19 ம் தேதி தொடங்கிய இந்தப் பிரச்சனை இன்னும் தீராமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதையடுத்து பிஜித் தீவின் பூர்வீகக் குடிமக்கள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் புரட்சிக்காரர்களுடனும், ராணுவத்தினருடனும்பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே பிஜி தீவு காமன்வெல்த் அமைப்பிலிருந்து காமன்வெல்த் அமைப்பின் எட்டு உறுப்பினர் கொண்ட காமன்வெல்த் அமைச்சரவைநடவடிக்கைக் குழுவால் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. காமன்வெல்த் அமைப்பின் முக்கியக் கவுன்சில்களிலிருந்து பிஜி நீக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பிஜி மீது பொருளாதாரத் தடை விதிப்பது தொடர்பாக எந்த முடிவையும் காமன்வெல்த் எடுக்கவில்லை. பிணைக்கைதிகளாகஅடைக்கப்பட்டுள்ள பிரதமர் மகேந்திர பால் செளத்ரி மற்றும் அவர்களுடன் உள்ள 29 அமைச்சர்களையும் விரைவில் விடுவிக்கவேண்டும் என்றும் குழு, தீவிரவாதிகளுக்குக் கோரிக்கை விடுத்தது.

பிணைக் கைதிகளை நீக்குவதற்கும், மீண்டும் ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வருவது தொடர்பாகவும் பிஜிக்கு உயர் மட்டக் குழுஒன்றை அனுப்பவும் காமன்வெல்த் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பிஜி நிலவரம் குறித்து ஆஸ்திரேலியா வெளியுறவுத் துறை அமைச்சர் அலெக்சாண்டர் டெளனர் கூறுகையில், பிஜியில் நடக்கும் கலவரம்மிகவும் மோசமானது. அங்கு தொடர்ந்து புரட்சிக்காரர்களால் பிரச்சனைகள் ஏறபட்டு வருவதால் அந்நாட்டின் பொருளாதாரம்மிகவும் பின்தங்கும் ஆபத்து உள்ளது.

இதனால் பிஜி மட்டுமின்றி துவாலு, சமோவா, டோங்கா நாடுகளும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது. இந்த சமயத்தில்பிஜி குறித்து அனைவரும் யோசித்துப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து பிஜியைநீக்குவதே சரியான தீர்வு என்றார்.

பிஜி ராணுவச் செய்தித் தொடர்பாளர் தாராகினிகினி கூறுகையில், காமன்வெல்த் கமிட்டி பிரதமர் மகேந்திர பால் செளத்திரியைவிடுவிக்குமாறும், அவருடன் பிணைக்கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள 29 பேரையும் விடுவிக்கும்படி கூறியுள்ளனர். புதிய இடைக்காலஅரசு அமைவது வரை ராணுவத்தினர் வரும் மூன்று மாதத்திற்கு பிஜியில் ஆட்சி புரிவதற்கு கோரிக்கை விடுத்துள்ளோம் எனறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+