தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
தற்காலிக போர் நிறுத்தம் கோரும் புலிகள்

கொழும்பு:

போர் நடக்கும் பகுதியிலிருந்து பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் வகையில் தற்காலிக போர் நிறுத்தத்தை அமல் படுத்த வேண்டும்என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக விடுதலைப் புலிகளின் லண்டன் அலுவலகத்திலிருந்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வடக்கு யாழ்ப்பாணம் வளைகுடாவில் தென் மராச்சிப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். இங்கு கடந்த சில வாரங்களாககடும் சண்டை நடந்து வருகிறது. சண்டை காரணமாக இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சண்டை நடந்து வரும் பகுதிகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. சபையின் அகதிகள் விவகாரத்திற்கான ஆணையர் ஆகியோர் நேரில் வந்துபார்வையிட வேண்டும். இங்கு போர் காரணமாக மக்கள் படும் சிரமங்களை அவர்கள் நேரில் ஆராய வேண்டும் என்று அறிக்கையில்தெரிவிக்கப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பு குறித்த கோரிக்கை வந்துள்ளதாக சர்வதே செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது. இந்தக் கோரிக்கை குறித்துஅரசுத் தரப்பில் கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

ஏற்கனவே மே27-ம் தேதி விடுதலைப் புலிகள் அறிவித்த போர் நிறுத்தத்தை ராணுவம் நிராகரித்தது நினைவிருக்கலாம். தற்போது புலிகள்அறிவித்துள்ளது போர் நிறுத்தம் அல்ல. வவுனியா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இளம் சிறுவர்களை போர்க் களத்திற்கு அழைப்பதற்காகவே இந்தபோர் நிறுத்தத்தை புலிகள் கோருகிறார்கள் என்று ராணுவம் கூறியுள்ளது.

6 பொதுமக்கள் சாவு:

இதற்கிடையே, இரண்டு வாரமாக அரசுத் தரப்பில் இருந்த சுணக்கமான நிலை நீங்கி, தென் மராச்சி மற்றும் பிற பகுதிகளில் ராணுவம் தீவிரதாக்குதலை தொடங்கியுள்ளதாக இலங்கை அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடும் மோதலில் 7 ராணுவ வீரர்கள் இறந்ததாகவும், 50 வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. புலிகள் தரப்பில் எத்தனை பேர்இறந்தனர், காயமடைந்தனர் என்ற விவரம் கிடைக்கவில்லை.

புதிய தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் விமானம் மற்றும் தரை மார்க்க தாக்குதலை விடுதலைப் புலிகள்வெற்றிகரமாக முறியடித்தனர்.

இஸ்ரேல் நாட்டு கேபிர் ஜெட் விமானம் மூலம் இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மக்கள்குடியிருக்கும் பகுதிகளில், ராணுவம், புதிதாக வாங்கப்பட்ட ராக்கெட் தாக்குதலை நடத்தியது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+