For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஜூ-ன்11, 2000

பாஞ்சாலி சபதம்

6. துரியோதனன் சகுனியிடம் சொல்வது

(தொடர்ச்சி)

பொற்றடத் தேரொன்று வாலிகன்
கொண்டு விடுத்ததும் - அதில்
பொற்கொடி சேதியர் கோமகன்
வந்து தொடுத்ததும்,
உற்றதோர் தம்பிக்குத் தென்னவன்
மார்பணி தந்ததும் - ஒளி
யோங்கிய மாலையாம் மாகதன்
தான்கொண்டு வந்த தும்,
பற்றல ரஞ்சும் பெரும்புக
ழேக லவியனே - செம்பொற்
பாதுகை கொண்டு யுதிட்டிரன்
தாளினில் ஆர்த்ததும்,
முற்றிடு மஞ்சத் திற்குப்பல
பல தீர்த்தங்கள் - மிகு
மொய்ம்புடை யான்அவந்தியர்
மன்னவன் சேர்த்ததும் (50)

மஞ்சன நீர் தவ வேத
வியாசன் பொழிந்ததும் - பல
வைதிகர் கூடிநின் மந்திர
வாழ்த்து மொழிந்த தும்
குஞ்சரச் சாத்தகி வெண்குடை
தாங்கிட,வீமனும் - இளங்
கொற்றவ னும்பொற் சிவிறிகள்
வீச, இரட்டை யர்
அஞ்சுவர் போலங்கு நின்று
கவரி இரட்டவே - கடல்
ஆளுமொருவன் கொடுத்ததோர்
தெய்விகச் சங்கி னில்
வஞ்சகன் கண்ணன் புனிதமுறுங்
கங்கை நீர் கொண்டு - திரு
மஞ்சன மாட்டும்அப் போதில்
எவரும் மகிழ்ந்த தும், (51)

மூச்சை யடைந்த தடா! சபை
தன்னில் விழுந்துநான் - அங்கு
மூர்ச்சை யடைந்தது கண்டனையே!
என்றன் மாமனே!
ஏச்சையும் அங்கவர் கொண்ட
நகைப்பையும் எண்ணுவாய் - அந்த
ஏந்திழை யாளும் எனைச்சிரித்
தாளிதை எண்ணு வாய்
பேச்சை வளர்த்துப் பயனொன்று
மில்லை, என் மாமனே! - அவர்
பேற்றை அழிக்க உபாயஞ் சொல்வாய்,
என்றன் மாமனே!
தீச்செயல் நற்செயல் ஏதெனினும்
ஒன்று செய்து நாம் - அவர்
செல்வங் கவர்ந்த வரைவிட
வேண்டும் தெருவிலே.(52)

(தொடரும்)

Back To Index Page

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X