தமிழகத்தில் இன்று
கொழும்பு:
வடக்கு யாழ்ப்பாணத்தில் அரசுக்கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்லும் மக்களை வி-டு-த-லைப் பு-லி-கள் தடுப்ப-தா-க இலங்கைஅரசு குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக இதே பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த போரில் 11விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.
அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்துக் கூறுகையில், பொன்னேரு, செம்மணி, மீசலை பகுதிகளில்பாதாள அறைகள் அமைத்து தங்கியிருந்த விடுதலைப்புலிகளை ராணுவம் தாக்கியது. சனிக்கிழமை நடந்தஇச்சம்பவத்தில் 9 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதா-க ரா-ணு-வம் கூறி--ய-து.
வவுனியாவில் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் இரண்டு விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.அப்பகுதியிலிருந்து போலீசார் சில ஆயுதங்கள் மற்றும் கிரானைட் வெடிகுண்டுகளைக் கைப்பற்றினர்.
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து அரசுக்கட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்குச் செல்ல முயலும் மக்களைவிடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாய்த் தடுக்கிறார்கள் என்று ரா-ணு-வம் குற்றம் சாட்டியுள்ளது..
மே 27 ம் தேதி புலிகளால் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தையடுத்து மக்கள் அங்கிருந்து வவுனியா பகுதிக்குச்சென்-று வ-ரு-கின்-ற-னர்.