நர்ஸிடம் முறைகேடாக நடந்து கொண்டாரா வார்னே?
சிட்னி:
இங்கிலாந்து நர்சிடம் தவறாக நடந்து கொண்டதாக வந்துள்ள புகாரையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஷான் வார்னே மீதுஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
தற்போது லண்டனில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை அதிகாரி மால்ஸ்பீட் இந்த மாத இறுதியில் நாடு திரும்புகிறார்.அதன் பிறகு ஒழுங்கு நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாம்ப்ஷயர் கவுன்டி கிரிக்கெட் அணிக்காக தற்போது வார்னே விளையாடி வருகிறார். லீசெஸ்டர் இரவு விடுதிக்குச் சென்ற வார்னே, அங்கு வந்த நர்,டோனா ரைட் என்பவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் அதை அனுமதிக்கவில்லை. இதையடுத்து செல்போன் மூலம், நர்ஸிடம்முறைகேடாக பேசியதாகத் தெரிகிறது.
வார்னேயின் இந்த செயல் குறித்து இங்கிலாந்து பத்திரிகைகளில் செய்தி வெளியானது. வார்னேவிடமிருந்து தேவையில்லாத, அறுவறுப்பான போன் கால்கள்வருவதாக நர்ஸ் டோனா ரைட்டும் கூறியிருந்தார்.
டெய்லி மிர்ரர் பத்திரிகைக்கு டோனா ரைட் அளித்த பேட்டியில், வார்னே யார் என்று எனக்குத் தெரியாது. நான் கிரிக்கெட்டை ரசிப்பவள் அல்ல. வார்னேகுறித்து நான் கேள்விப்பட்டதே இல்லை.
வார்னே பார்ப்பதற்கு நன்றாகவும் இல்லை. தடியாக இருக்கிறார். வாயில் எப்போது பார்த்தாலும் சிகரெட் வேறு என்று டோனா கூறியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து வார்னே கருத்துத் தெரிவிக்கையில், ஒவ்வொரு கதைக்கும் மறுபக்கம் உண்டு. இதுகுறித்து நான் கருத்துத் தெரிவிக்கவிரும்பவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications