For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்-கி-றார் -"தி-ரு"

By Staff
Google Oneindia Tamil News

போர் விமா-னத்-தில் தீ பிடித்-தா-லும் பல உயிர்களைக் காப்பாற்றிய விமா-னி

டெல்லி:

மேற்கு வங்க மாநிலம் மித்னாபூரில், இந்திய விமானப் படையின் மிக்-27 ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது, வானில் வெடித்துச்சிதறியது. சிதறல்களில் ஒன்று வீட்டில் விழுந்ததில் ஒரு சிறுமி காயமடைந்தார்.

திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு வழக்கம் போல பயிற்சிக்குக் கிளம்பியது அந்த விமானம், விமானத்தை பைலட் ஸ்குவாட்ரன் லீடர் ஜோஷி (30)செலுத்தினார். பிரதாஹி என்ற இடத்தில் விமானம் வந்து கொண்டிருந்தபோது, திடீரென தீப்பிடித்துள்ளது.

விமானத்தின் முன் பகுதியில் தீப்பிடித்துள்ளது. இதையடுத்து தரைப் பகுதி கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விமானிக்குத் தகவல் தரப்பட்டது. இதையடுத்து கீழேஉள்ள கிராம மக்களைக் காப்பாற்றும் நோக்கத்தில் விமானத்தை வேகமாக ஓட்டி, மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள பகுதிக்கு வந்ததும்,பாராசூட் மூலம் கீழே குதித்தார்.

கீழே குதித்த விமானியை கிராமத்தினர் சூழ்ந்து கொண்டனர். அவர்களிடம் ஜோஷி பேசுகையில், விமானத்தின் முன்பகுதியில் தீப்பிடித்துக் கொண்டதை நான்பார்த்தவுடன், பெரிய அளவு சேதத்தை தடுக்கும் விதத்தில், விமானத்தை மக்கள் நெருக்கம் குறைவான பகுதிக்கு விரைவாக செலுத்தினேன் என்றார்.

இருப்பினும், விமான சிதறலில் ஒன்று ஆரத்தி சிங் (16) என்ற சிறுமியின் வீட்டின் மீது விழுந்தது. இதில் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவர்உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X