தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
விமரிசையாக நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் ஞாயிற்றுக்கிழமை மகாகும்பாபிஷேகம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.40 மணிக்கு வேத மந்திரங்கள் ஓத ராஜகோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம்நடந்தது. இதையடுத்து இரண்டு கோபுரங்களுக்கு அபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தின்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் முருகா முருகா என்றுகோஷமிட்டனர்.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதிசாமிகள், தமிழக சட்டசபை சபாநாயகர் பிடிஆர் பழனிவேல்ராஜன், தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர்தமிழ்க்குடிமகன், மதுரை மாவட்டக் கலெக்டர் தங்கவேலு மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications