தமிழகத்தில் இன்று
வெள்ளத்தில் சிக்கிய 31 பேரை காப்-பாற்-றி-ய விமானப் படை-
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஷில்லாங்:
அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 31 பேரை ஹெலி-காப்-ட-ரில் வந்-த விமானப் படை வீரர்கள் மீட்டனர்.
பாசிகாட் என்ற பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இவர்கள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து விமானப் படை வீரர்களுக்குத் தகவல் தரப்பட்டது.விரைந்து வந்த விமானப் படை வீரர்கள் 31 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
அருணாச்சல் பிரதேச மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் நிலச்சரிவும், பிரம்மபுத்திராஆற்றில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு பாசிகாட் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் 31 பேர் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து மொஹாம்பைர் விமானப் படை தளத்திற்குத் தகவல் தரப்பட்டது. அங்கிருந்து ஸ்குவாட்ரன் லீடர் சர்மா தலைமையில் எம்ஐ-17 ரகஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது. மொத்தம் ஆறு முறை ஹெலிகாப்டர் மீட்புப் பணியில் ஈடுபட்டது.
மரங்கள் மற்றும் வீடுகளின் மேற்கூரைகளில் தஞ்சம் புகுந்திருந்த மக்களை விமானப்படை வீரர்கள் மீட்டனர். படகுகளில் அடைக்கலம் புகுந்திருந்தசிலரையும் விமானப்படை வீரர்கள் மீட்டனர்.
மாலை 4 மணிக்குத் துவங்கிய மீட்புப் பணி மூன்று மணி நேரம் தொடர்ந்து நடந்தது. அதன் பிறகு கடும் மழை மற்றும் வெளிச்சமின்மை காரணமாகதிங்கள்கிழமை காலைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications