தமிழகத்தில் இன்று
தமிழகம் வந்த அகதிகளில் புலிகள் -யா-ரும் இல்லை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
இலங்கையில் நடந்து வரும் போர் காரணமாக கடந்த 5 மாதங்களில் 1203 பேர் அகதிகளாக தமிழகம்வந்துள்ளனர். அவர்களில் விடுதலைப் புலிகள் யாரும் இல்லை என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. சர்மாதெரிவித்தார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
தமிழகத்தில் 125 அகதிகள் முகாம்கள் உள்ளன. அவற்றில் 66 ஆயிரம் பேர் அகதிகளாக உள்ளனர். இவர்கள்முறைப்படி பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாமல் 10 ஆயிரம் பேர் அகதிகளாக இருக்கின்றனர்.
இலங்கையில் தற்போது நடந்து வரும் சண்டை காரணமாக ஈழத் தமிழர்கள் கடந்த ஐந்தரை மாதங்களில் 1203 பேர்தமிழகம் வந்துள்ளனர். கடந்த மாதத்தில் மட்டும் 200 பேர் வந்தனர். அவர்களில் புலிகள் யாரும் இல்லை.
தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது. அப்படி பேசுவதனால் சட்டம்ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications