For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டென்னிஸ்: விஜய் கண்ணன், முஸ்தபா போராட்டத்திற்குப் பின் வெற்றி

By Staff
Google Oneindia Tamil News

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பெங்களூர்:

பெங்களூரில் நடைபெறும் மெக்டோவல்ஸ் ஐ.டி.எப் ஆடவர் சாட்டிலைட் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் விஜய் கண்ணன், முஸ்தபா கெளஸ்ஆகியோர் வெற்றி பெற்றனர்.

கண்ணன், பிரான்ஸ் வீரர் குவேனல் குயூட்டை எதிர்த்து மோதினார். இதில் 7-6 (7-3), 2-6, 7-6 (7-4) என்றசெட் கணக்கில் கண்ணன் வெற்றிபெற்றார். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்தப் போட்டியில் இரு வீரர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். ஒவ்வொரு செட்டும் நீண்ட இழுபறிக்குப்பின்னரே, முடிவுக்கு வந்தது.

மற்றொரு போட்டியில் இந்திய வீரர்கள் முஸ்தபா கெளஸ், ரோஹன் போபண்ணா மோதினர். இதில் 4-6, 7-6 (7-4), 6-2 என்ற கணக்கில் முஸ்தபாவெற்றி பெற்றார்.

மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில், ஸ்வீடனின் பெர் தார்னட்சூன் 6-4, 6-4 என்ற எளிதான நேர் செட்களில், இந்தியாவின் பதஞ்சலி ரவிசங்கரைத்தோற்கடித்தார்.

இரட்டையர் பிரிவில் ஹர்ஷன் மன்கட், அஜய் ராமசாமி ஜோடி, முதல் நிலை ஆட்டக்காரர்களான சந்தீப் கீர்த்தனே, செளரவ் பாஞ்சாவை தங்களது முதல்சுற்றுப் போட்டியில் 6-4, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் தோற்கடித்தது. இரண்டாவது போட்டியில், போபண்ணா, ரிஷி ஸ்ரீதர் ஜோடி, 6-3, 6-2என்ற செட் கணக்கில் சதுர்வேதி, சந்திரசேகர் மொஹந்தி ஜோடியை வென்றது.

யு.என்.ஐ.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X