For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

மகனுக்கு இடம் தராத தலைமையாசிரியரை தாக்கிய திமுக- பிரமுகர்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">திருச்சி:

மகனுக்கு பள்ளியில் படிப்பதற்கு இடம் தராத காரணத்தால் தலைமையாசிரியர் தாக்கினார் தி-மு-க பிர-மு-கர்.

இதை-ய-டுத்-து அவ-ரும் இத்தாக்குதலுக்கு உடந்தையாயிருந்த மேலும் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

திருச்சியில் ஆர்எஸ்கே உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக வேலை செய்து வருபவர் பாதிரியார் ஜான் பெர்க்மன்ஸ்.

பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் யூனியன் தலைவரும், திமுக தொழிற்சங்கத் தலைவராக இ-ருப்-ப-வர் முத்துக்கருப்பன்.

முத்துக்கருப்பன் தனது மகனைப் ஆர்எஸ்கே பள்ளியில் சேர்க்கச் சென்ற போது அவரது மகனுக்கு இடம் கொடுக்க பாதிரியார் மறுத்ததால் இவருக்கும்பாதிரியாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் முத்துக்கருப்பனும் அவரது ஆட்களும் சேர்ந்து அவரைத் தாக்கினார்கள். இது தொடர்பாகப்போலீசார் முத்துக்கருப்பன் உள்பட மூன்று பேரைக் கைது செய்தனர்.

முன்னதாக முத்துக்கருப்பன் இத்தாக்குதல் சம்பவம் குறித்துப் போலீசில் கொடுத்த புகாரில், தன் மகனை ஆர்எஸ்கே பள்ளியில் சேர்க்கச் சென்ற போதுபாதிரியார் அங்கு பள்ளி மாண-வர் சேர்க்கையில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாகவும், அதைத் தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் பாதிரியார்தன்னைத் தாக்கியதால் தான் திருப்பித் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இத்தாக்குதலில் காயமடைந்த பாதிரியார், கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 9 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X