தமிழகத்தில் இன்று
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கைத் தலைநகர் கொழும்பு புறநகரில் புதன்கிழமை காலை விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு விமானப்படை வாகனத்தில் மோதி வெடித்ததில்,மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்தனர்.
கொழும்புவுக்கு வடக்கில் உள்ள வட்டாலா என்ற இடத்தில் காலை 9 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்தது. விமானப்படை பஸ் ஒன்றின் மீது மனிதவெடிகுண்டாக வந்த நபர் மோதி, குண்டை வெடிக்கச் செய்தார்.
சம்பவம் நடந்தபோது, பஸ்சில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெரியவில்லை. இருப்பினும் 3 பேர் இறந்ததாகவும், குறைந்தது 8 பேர்காயமடைந்ததாகவும் தெரிகிறது.
பஸ்சில் இலங்கை விமானப்படை வீரர்கள் இருந்ததாகத் தெரிகிறது. இவர்கள் அனைவரும் காட்டுநாயக்கே விமானநிலையத்திலிருந்து மருத்துவமனைஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த வாரம் புதன்கிழமையும், இதேபோல, கொழும்பு நகரில் நடந்த மனித வெடிகுண்டு வெடிப்பில் அமைச்சர் உள்பட 23 பேர் கொல்லப்பட்டதுநினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications