தமிழகத்தில் இன்று
இலங்கைக்கு ரூ.450 கோடி நிதியுதவி அளித்தது சரியே - மூப்பனார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
இலங்கைக்கு இந்தியா 450 கோடி ரூபாய் நிதியுதவி அளித்ததில் தவறில்லை. நிதியுதவி அளிப்பதில் கால நேரம் பார்க்க முடியாது என்று தமாகா தலைவர்மூப்பனார் தெரிவித்தார்.
சென்னையில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
கேள்வி: அதிமுக பொதுச்செயலாளர் தனித்து ஆட்சி அமைப்போம் என்றார். நீங்கள் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்றீர்கள். இப்போது தமாகாவுடன்கூட்டணி தொடர வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
பதில்: நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். அவருடைய நம்பிக்கையை அவர் சொல்கிறார். என்னைப் பொருத்தவரையில் மத்தியிலும், மாநிலத்திலும்கூட்டணி ஆட்சி தான் வரும்.
கேள்வி: திமுகவுடன் தமாகா நெருங்கி வருவதாக கூறப்படுகிறதே?
பதில்: பத்திரிகைகள்தான் அப்படி எழுதுகின்றன.
கேள்வி: இலங்கைக்கு இந்தியா நிதியுதவி அளித்ததை சிலர் எதிர்க்கிறார்களே?
பதில்: சிலர் தான் எதிர்க்கின்றனர். மெஜாரிட்டி பேர் அப்படி சொல்லவில்லை. நான் மெஜாரிட்டி பக்கம் இருக்கிறேன்.
கேள்வி: இலங்கைக்கு நிதியுதவி அளித்தது சரியா தவறா?
பதில்: அது தவறு இல்லை.
கேள்வி: ஈழத் தமிழர்களுக்கு விடுதலைப் புலிகள் மட்டுமே பிரதிநிதிகள் அல்ல என்றும், எல்லா தமிழ் அமைப்புகளையும் அழைத்துப் பேச வேண்டும்என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?
பதில்: நான் ஏற்கனவே சொன்னதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு கட்சியும் இந்த பிரச்சினையில் தனிக் கொள்கையை கொண்டுள்ளன.அந்த வகையில் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. முதல்வர் கூட தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கேள்வி: விடுதலைப்புலிகளை அழைக்காமல் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமா?
பதில்: அவர்களை அழைக்காமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. அவர்களும் ஈழத் தமிழர்களுக்காகத் தான்போராடுகின்றனர்.
கேள்வி: இலங்கைக்கு நிதியுதவி அளிக்க இது சரியான நேரமல்ல என்கிறார்களே?
பதில்: உதவி செய்வதற்கு நேரம் காலம் பார்க்க முடியாது. அப்படிப் பார்த்தால் பாதிக்கப்பட்டவர்கள் செத்துப் போவார்கள் என்றார் மூப்பனார்.












Click it and Unblock the Notifications