தமிழகத்தில் இன்று
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">மற்றதன் பின்னர் இருவரும் - அரு
மந்திரக் கேள்வி உடையவன் - பெருங்
கொற்றவர் கோன்திரித ராட்டிரன் - சபை
கூடி வணங்கி இருந்தனர் - அருள்
அற்ற சகுனியும் சொல்லுவான் - ஐய!
ஆண்டகை நின்மகன் செய்திகேள் - உடல்
வற்றித் துரும்பொத் திருக்கின்றான் - உயிர்
வாழ்வை முழுதும் வெறுக்கின்றான். (58)
உண்ப சுவையின்றி உண்கின்றான் - பின்
உடுப்ப திகழ உடுக்கின்றான் - பழ
நண்பர்க ளோடுற வெய்திடான் - இள
நாரியரைச் சிந்தை செய்திடான் - பிள்ளை
கண்பாலை கொண்டு போயினான் - இதன்
காரணம் யாதென்று கேட்பையால் - உயர்
திண்பரு மத்தடந் தோளினாய்- என்று
தீய. சகுனியும் செப்பினான். (59)
தந்தையும் இவ்வுரை கேட்டதால் - உளம்
சாலவும் குன்றி வருந்தியே - என்றன்
மைந்த! நினக்கு வருத்தமேன்? - இவன்
வார்த்தையிலேதும் பொருளுண்டோ? - நினக்கு
எந்த விதத்துங் குறையுண்டோ? - நினை
யாரும் எதிர்த்திடுவாருண்டோ? - நின்றன்
சிந்தையில் எண்ணும் பொருளெலாம் - கணத்
தேடிக் கொடுப்பவர் இல்லையோ? (60)