தமிழகத்தில் இன்று
இடைத்---தர்-தல்-: ஜெயிப்-பா-ரா பாண்-டிச்-சேரி மு-தல்-வர்?
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் வரும் 30 ம் தேதி நடக்கவுள்ள ஏனாம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முதல்வர் சண்முகம் உள்பட 4 பேர் களத்தில் உள்ளனர்.
பாண்டிச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.ஹேமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ஏனாம் தொகுதி இடைத்தேர்தலுலில் போட்டியிட முதல்வர் சண்முகம்(காங்கிரஸ்), கொல்லபாலி கங்காதரப் பிரதாப் (பாஜக) மற்றும் இரண்டு சுயேச்சைகள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்களது மனுக்கள்சரியாக உள்ளன.
காங்கிரஸ் கட்சி டம்மி வேட்பாளர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இடைத் தேர்தல் பார்வையாளராக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக இயக்குநர் அம்ரேந்தர் குமார் துபேநியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.
முதல்வர் சண்முகம் தற்போது எம்.எல்.ஏவாக இல்லை. மார்ச்சில் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட அவர் 6 மாதத்திற்குள் தேர்தலில் நின்றுசட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.
யு.என்.ஐ.