கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
ராஜேஷ் பைலட் அரசியலுக்கு வர உதவியவர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ராஜேஷ் பைலட் விமானப் படையிலிருந்து விலகி அரசியலில் நுழையவிரும்பியபோது, அவரை விமானப்படையிலிருந்து விடுவிக்க, மூத்த அரசியல்தலைவரும், முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சருமான சி.சுப்ரமணியம்உதவியுள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவரான ராஜேஷ் பைலட், சில நாட்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில்நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். பைலட் குறித்த தனது நினைவுகளைசி.சுப்ரமணியம் பகிர்ந்து கொண்டுள்ளார். பைலட் குறித்து அவர் கூறுகையில், ராஜேஷ்பைலட், விமானப்படையில் பைலட்டாக இருந்தபோது அதிலிருந்து விலகி அரசியலில்நுழைய விரும்பினார்.
1979-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட அவர் விரும்பினார்.இதையடுத்து தன்னை பைலட் பணியிலிருந்து விடுவிக்குமாறு விமானப்படைஅதிகாரிகளுக்கு அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர்கள் அனுமதி தரவில்லை.
அப்போது நான் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன். பைலட் விவகாரம் என்னிடம்வந்தது. இதையடுத்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளைச் சமாதானப்படுத்திபைலட்டை பணியிலிருந்து விடுவித்தேன்.
பாதுகாப்புத் துறை பின்னணியில் இருப்பவர்கள் நாடாளுமன்றத்தில் எம்.பிக்களாகவருவதை நான் விரும்பினேன். அது நல்லது என்று நான் நினைத்தேன் என்றார்சி.சுப்ரமணியம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications