For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஜகார்தாவில் 103 திருடர்களுக்கு மக்கள் கொடுத்த "மரண தண்டனை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஜகார்தா:

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில், பொதுமக்களிடம் சிக்கி 100க்கும் மேற்பட்ட திருடர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜகார்தாவில் திருடர்கள் அதிகம். இவர்களைப் போலீஸ் பிடிக்கிறதோ இல்லையோ, பொதுமக்கள் அதிகமாகவே பிடிக்கின்றனர். பிடிப்பதோடுமட்டுமல்லாது, கொன்று விடுகின்றனர். சில நேரங்களில் அடித்துக் கொல்கின்றனர். பல நேரங்களில் எரித்துக் கொல்கின்றனர்.

திருடர்களைப் பிடித்தால் கொல்லக் கூடாது. போலீஸிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று பலமுறை போலீஸ் தரப்பில் எச்சரித்தும் கூட அதைபொதுமக்கள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

இந்த ஆண்டு இதுவரை 100-க்கும் மேற்பட்ட திருடர்களுக்கு, பொதுமக்கள் "மரண தண்டனை கொடுத்துள்ளனர். ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை103 திருடர்கள் அடித்தும், எரித்தும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை மட்டும் ஐந்து திருடர்களின் உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது. ஐந்து பேரும் எரித்துக் கொல்லப்பட்டனர்.

முன்பெல்லாம் விஷம் கொடுத்துத்தான் திருடர்கள் கொல்லப்படுவார்கள். இப்போது அதெல்லாம் பழைய முறையாகி விட்டதாக மருத்துவமனை ஊழியர்ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஐந்து பேரும் கிழக்கு ஜகார்தாவில் வேன் பயணிகளிடம் திருட முயன்றுள்ளனர். இதையடுத்து அவர்களை வேனில் சென்ற பயணிகள் அடித்து, தீவைத்துஎரித்துக் கொன்றனர்.

நாட்டில் அமலாக்கப்படும் சட்டத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லாததையே இது காட்டுவதாக ஜகார்தா காவல்துறைசெய்தித்தொடர்பாளர் மேஜர் அலெக்ஸ் மண்டலிகா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X