தமிழகத்தில் இன்று
இளவரசர்களின் கலை விருந்து
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கலையின் பெயரால் கை கோர்த்துள்ளனர் இரு சர்-வ-தே-ச ராஜ குடும்பத்து இளவல்கள்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கேன்வாஸ் பெயின்டிங்கில் கை தேர்ந்தவர்.
இவரைப் போலவே, வாட்டர் கலர், கேன்வாஸ் பெயின்டிங்கில் கலக்குபவர் செளதி அரேபிய இளவரச் காலித் அல் பைசல்.
இரண்டு இளவரசர்களும் சேர்ந்து லண்டனில் தங்களது கைவண்ணத்தைக் காட்சிக்கு வைத்தனர். லண்டனின் கிரான்ட் பாங்கட் ஹவுஸ் அரங்கில் வியாழக்கிழமை இந்தக் கலை விருந்துபார்வையாளர்களுக்கப் பரிமாறப்பட்டது.
இங்கிலாந்துக்கும், செளதி அரேபியாவுக்கும் இடையிலான மிகப் பெரிய கலாச்சாரப் பரிவர்த்தனை என்று இதற்குப் பெயரிடப்பட்டிருந்தது.
இளவரசர் காலித் வரைந்திருந்த 26 ஆயில் பெயின்டிங்குகளும், மக்களையும், மலைகளையும் பிரதிபலிப்பதாக இருந்தது. தனது சொந்த மாநிலத்தில் உள்ள ஆசிர் என்ற ஊரை மையமாக வைத்துதனது ஓவியங்களை அல் பைசல் வரைந்திருந்தார்.
"நிறைய படங்கள் வரைந்தேன். ஆனால் அவற்றை பயன்படுத்த சரியான வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே அவற்றில் பலவற்றை எரித்து விட்டேன். சிலர் இதைப் பார்த்து விட்டு,ஏன்எரிக்க வேண்டும். கண்காட்சிக்கு வைக்கலாமே. அதன் மூலம் கிடைக்கும் பணத்தை இறந்த எனது தந்தையும், மன்னருமான பைசல் அறக்கட்டளைக்குக் கொடுக்கலாமே என்றுஆலோசனை தந்தனர். எனவே கண்காட்சியில் அவற்றை வைக்க முடிவு செய்தேன் என்றார் அல் பைசல்.
கிரான்ட் பேங்கட் ஹவுஸ் அரங்கின் மையத்தில் மிகப் பெரிய அரேபிய முறையிலான குடிசை போடப்பட்டு, அதற்குள் இளவரசர் காலித் அல் பைசலின் ஓவியங்கள் வைக்கப்பட்டிந்தன.
இளவரசர் சார்லஸின் 30 வாட்டர் கலர் ஓவியங்கள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. பெரும்பாலானவை, ஸ்காட்லாந்து, துருக்கி, கிரீஸ், செளதி அரேபியாவில் வைத்துவரையப்பட்டவை.
தனது ஓவியங்கள் குறித்து சார்லஸ் கூறுகையில், "ஆசிர் நகரம் எனக்கு மிகவும் சவாலாக விளங்கியது. அருமையான மலைத் தொடர்களை படத்தில் கொண்டு வருவது மிகவும் பிரமிப்புக்குரியபணியாக இருந்தது. இருப்பினும் சவாலை துணிவுடன் சந்தித்தேன். ஒரு நாள் முழுவதும் இருந்து அந்தப் படத்தை முடித்தேன் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications