அஸாருதீன் விலக அமைச்சர் அறிவுரை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் புகாரில் தன் மீதான புகார் பொய் என்று நிரூபிக்கப்படும் வரை, கிரிக்கெட் அணியிலிருந்து அஸாருதீன் விலக வேண்டும் என்று மத்தியவிளையாட்டுத் துறை அமைச்சர் சுக்தேவ் சிங் தின்ட்சா கூறியுள்ளார்.
இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது, இடைத்தரகர் ஒருவரை அஸாருதீன்தான் தனக்கு அறிமுகப்படுத்தி வைத்ததகாவும், அவரிடமிருந்து பணம்பெற்றதாகவும், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் குரோனியேவியாழக்கிழமை, விசாரணைக் கமிஷன் முன்பு அளித்த சாட்சியத்தில்தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரை அஸாருதீன் மறுத்துள்ளார். நான் அப்பாவி. இந்த விவகாரத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் மறுத்துள்ளார்.
இந்த நிலையில் அஸாருருதீன் உடனடியாக அணியிலிருந்து விலக வேண்டும் என்ற மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சுக்தேவ் சிங் தின்ட்சா கூறியுள்ளார்.
தின்ட்சா தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அஸாருதீன், மூத்த வீரர். அவர் மீதான புகார் பொய் என நிரூபிக்கப்படும் வரை தார்மீக அடிப்படையில்அவர் பதவி விலக வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications