For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

நீந்தியே இந்தியா வந்த 5 அகதிகள்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ராமேஸ்வரம்:

பாக் ஜலசந்தியில், நடுக்கடலில் மூன்று கிலோமீட்டர் நீந்தி வந்த ஐந்து இலங்கைத்தமிழர்களை கடற்படையினர் மீட்டுக் கரை சேர்த்தனர்.

யாழ்ப்பாணம் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவ வீரர்களுக்கும்இடையே கடும் சண்டை நடப்பதால் அங்கிருந்து தமிழர்கள், அதிகளாக ராமேஸ்வரம்வந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தனுஷ்கோடி அருகே ஐந்தாம் தீவை நோக்கி ஐந்து தமிழ் இளைஞர்கள்கடலில் நீந்தி வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த இந்தியக் கடற்படை வீரர்கள்,உடனடியாக மீட்டு தனுஷ் கோடி கொண்டு வந்தனர்.

ஐந்து இளைஞர்களும், திரிகோனமலையைச் சேர்ந்தவர்கள். 23 முதல் 30 வயதுக்குள்இருக்கும். இவர்களைக் கொண்டு வந்த படகு, ஒரு தீவில் விட்டு விட்டுச் சென்றது.அந்தத்தீவு இலங்கை எல்லைக்குள் உள்ளது. ஜூன் 13-ம் தேதி அவர்கள் அத்தீவில்விடப்பட்டனர்.

இந்த நிலையில், அங்கிருந்து கடலில் நீந்திக் கடக்க முடிவு செய்தனர். மூன்று கிலோமீட்டர்தொலைவுக்கு நீந்திக் கடந்த அவர்களைக் கடற்படை வீரர்கள் பார்த்து மீட்டுக் கரைசேர்த்தனர்.

அவர்கள் கடற்படை அதிகாரிகளிடம் கூறுகையில், ஆறாவது தீவில் 22-க்கும் மேற்பட்டஅகதிகள் குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பதாகத்தெரிவித்தனர். இவர்களில் பெண்களும், குழந்தைகளும் இருப்பதாகவும் அவர்தெரிவித்தனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X