கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
அமைதித் திட்டத்துக்கு சிங்களர்கள் எதிர்ப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
தமிழர்களுக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் வகையில் இலங்கை அரசு உருவாக்கி வரும் அமைதித் திட்டத்துக்கு சிங்கள தலைவர்கள் கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்காக இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறது.
தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் தரும் வகையில், புதிய சமரசச் திட்டத்தை இலங்கை அரசு உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகமுக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்கேவுடன் அதிபர் சந்திரிகா பேச்சு நடத்தி வருகிறார்.
ஜூலை மத்தியில் இதுதொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இதற்கு தீவிர சிங்கள அமைப்புகள்,கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சிங்களா உருமுயா என்ற கட்சியின் தலைவர் குணசேகரா கூறுகையில், தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கும் வகையிலான அரசியல் தீர்வை நாங்கள்அனுமதிக்க மாட்டோம். இதுதொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டால் அதை எதிர்ப்போம். தோற்கடிப்போம்.
புதிய சமரசத் திட்டத்தின்படி, புதிதாக அமைக்கப்படும் பிராந்தியக் கவுன்சில்களுக்கு கூடுதல் அதிகாரம் இருக்கும். பிராந்திய பாதுகாப்பு மற்றும்அதிகாரத்தில் இந்தக் கவுன்சிலுக்கு அதிக அதிகாரம் இருக்கும். இதனால் மத்திய அரசின் அதிகாரம் கேள்விக்குரியதாகி விடும். நாட்டின்இயாைண்மையும் பாதிக்கப்படும் என்றார் அவர்.
இதற்கிடையே, அரசியல் சட்டச் சீர்திருத்தம் குறித்து முடிவெடுப்பதற்கான காலக் கெடுவை ஜூன் 30-ம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது என்றுஅதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
அரசியல் சீர்திருத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் 30-ம் தேதிக்கு மேல் நீடிக்க முடியாது என்று அதிபர் சந்திரிகா உறுதியாக கூறியுள்ளார்.
தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வட கிழக்கு மாகாணக் கவுன்சிலை அமைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதில் விடுதலைப் புலிகள் அமைப்புஉள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இடம் பெற அரசு விரும்புகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு இந்த கவுன்சில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும். அதன் பிறகு வடக்கு மாகாணத்துடன் இணைந்து இருக்க, கிழக்கு மாகாணமக்கள் விரும்புகிறார்களா என்பது குறித்து அரசு கருத்துக் கணிப்பு நடத்தி முடிவெடுக்கும்.
யு.என்.ஐ.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications