கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
அமைதித் திட்டத்துக்கு சிங்களர்கள் எதிர்ப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
தமிழர்களுக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் வகையில் இலங்கை அரசு உருவாக்கி வரும் அமைதித் திட்டத்துக்கு சிங்கள தலைவர்கள் கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்காக இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறது.
தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் தரும் வகையில், புதிய சமரசச் திட்டத்தை இலங்கை அரசு உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகமுக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்கேவுடன் அதிபர் சந்திரிகா பேச்சு நடத்தி வருகிறார்.
ஜூலை மத்தியில் இதுதொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இதற்கு தீவிர சிங்கள அமைப்புகள்,கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சிங்களா உருமுயா என்ற கட்சியின் தலைவர் குணசேகரா கூறுகையில், தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கும் வகையிலான அரசியல் தீர்வை நாங்கள்அனுமதிக்க மாட்டோம். இதுதொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டால் அதை எதிர்ப்போம். தோற்கடிப்போம்.
புதிய சமரசத் திட்டத்தின்படி, புதிதாக அமைக்கப்படும் பிராந்தியக் கவுன்சில்களுக்கு கூடுதல் அதிகாரம் இருக்கும். பிராந்திய பாதுகாப்பு மற்றும்அதிகாரத்தில் இந்தக் கவுன்சிலுக்கு அதிக அதிகாரம் இருக்கும். இதனால் மத்திய அரசின் அதிகாரம் கேள்விக்குரியதாகி விடும். நாட்டின்இயாைண்மையும் பாதிக்கப்படும் என்றார் அவர்.
இதற்கிடையே, அரசியல் சட்டச் சீர்திருத்தம் குறித்து முடிவெடுப்பதற்கான காலக் கெடுவை ஜூன் 30-ம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது என்றுஅதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
அரசியல் சீர்திருத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் 30-ம் தேதிக்கு மேல் நீடிக்க முடியாது என்று அதிபர் சந்திரிகா உறுதியாக கூறியுள்ளார்.
தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வட கிழக்கு மாகாணக் கவுன்சிலை அமைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதில் விடுதலைப் புலிகள் அமைப்புஉள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இடம் பெற அரசு விரும்புகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு இந்த கவுன்சில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும். அதன் பிறகு வடக்கு மாகாணத்துடன் இணைந்து இருக்க, கிழக்கு மாகாணமக்கள் விரும்புகிறார்களா என்பது குறித்து அரசு கருத்துக் கணிப்பு நடத்தி முடிவெடுக்கும்.
யு.என்.ஐ.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications