தமிழகத்தில் இன்று
சென்னை "தாதா வீரமணி கைது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சென்னை "தாதா அயோத்தியாக்குப்பம் வீரமணி கைது செய்யப்பட்டார்.
போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து ரகளை செய்த குற்றத்திற்காக அவர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னையை கலக்கி வரும் ரவுடிகளில் அயோத்தியாகுப்பம் வீரமணிமுக்கியமானவர். அரசியல் பின்னணியோடு சென்னையில் மீனவர் பகுதிகளில் ரவுடிராஜ்ஜியம் நடத்தி வருபவர். இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன.
பிரபலமான இவர் ஜாம்பஜார் போலீஸ் நிலையத்திற்குள் தனது அடியாட்களுடன்புகுந்து ரகளை செய்துள்ளார். தனது உறவினர்கள் இருவரை போலீசார் கைது செய்துஅழைத்து வந்து விட்டதால் ஆத்திரமடைந்து இச்செயலில் ஈடுபட்டார்.
மாமூல் வசூலிப்பதில் மகாலிங்கம் என்பவருடன் ஏற்பட்ட தகராறில் வீரமணியின்உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று கூறி, போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து அடித்து நொறுக்கியதோடு,புகார் கொடுத்த மகாலிங்கம் என்பவரின் வீட்டையும் வீரமணி அடித்துநொறுக்கியுள்ளார்.
இந்த குற்றத்திற்காக வீரமணி வெள்ளிக் கிழமை கைது செய்யப்பட்டார். அவரது"டாட்டா சுமோ காரும் பறிதல் செய்யப்பட்டது.