இந்தியாவில் பெண் கல்வித் திட்டத்துக்கு "கேர் அமைப்பு நிதி உதவி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மும்பை:
இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான கல்வித் திட்டங்களுக்கு உலகின் பெரிய உதவி மற்றும் வளர்ச்சிஅமைப்பான "கேர் (இஅகீஉ) அமைப்பு நிதி உதவி அளிக்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்த அமைப்புசமீபத்தில் வெளியிட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் போதிய கல்வி அறிவைப் புகட்டினால்தான் உலகில் வறுமை, பசி,பட்டினி ஆகியவற்றை ஒழிக்கவும், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியைக் காணவும் முடியும் என்று உலகவங்கியின் சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்தியாவில் எழுத்தறிவு சதவீதம் மிகவும் குறைவாக உள்ள ராஜஸ்தான் மற்றும் உத்திரப் பிரதேசமாநிலங்களில் சுமார் 300 கிராமங்களில் உள்ள பள்ளிக் கூடங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று கேர்அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த நிதியுதவின் மூலம் மேற்கண்ட இரு மாநிலங்களிலும் 6 ஆண்டு பெண் கல்வித் திட்டத்தை வெற்றிகரமாகச்செயல்படுத்தமுடியும். "மாஸ்டர்கார்டு இன்டர்நேஷனல் மூலம் இத் திட்டத்துக்குப் போதுமான நிதியுதவிஅளிக்கப்பட உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் பயனடைவார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications