தமிழகத்தில் இன்று
-சீ-றிப் பாயந்-த-து பிருத்வி...மூக்-கால் அ--ழு-கி-ற-து அமெரிக்கா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">வாஷிங்டன்:
தரையிலிருந்து ஏவப்படும் குறுகிய தூர பிருத்வி ஏவுகனையை இந்தியா சோதனை செய்து பார்த்துள்ளதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
பிருத்வியை ஏவியுள்ளதன் மூலம், தெற்காசிய பிராந்தியத்தில் அமைதிக்கு ஊறு ஏற்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறைசெய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பெளச்சர் இதுகுறித்துக் கூறுகையில், இந்தியாவும், பாகிஸ்தானும், போட்டி போட்டு ஆயுதப் போட்டியில் இறங்குவதால்,தெற்காசியாவில் பதற்ற நிலைதான் அதிகரிக்கும்.
குறுகிய தூர, நீண்ட தூர ஏவுகனையைத் தயாரிப்பதன் மூலம் அணு ஆயுதப் போட்டியும் தெற்காசியாவில் அதிகரிக்கும்.
இந்தியா பிருத்வி ஏவுகனையை சோதனை செய்து பார்த்துள்ளது வருத்தம் தருவதாக உள்ளது. இந்தியா உள்பட பிற நாடுகளை ஏவுகனைத் தொழில்நுட்பவளர்ச்சியில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு தொடர்ந்து அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது என்றார் அவர்.
முன்னதாக மேற்கு வங்க மாநிலம் சந்திப்பூர் ஏவுகனைத் தளத்திலிருந்து பிருத்வி ஏவுகனை, வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.
தரையிலிருந்து ஏவப்பட்டு, தரையிலுள்ள இலக்கைத் தாக்கும், குறுகிய தூர ஏவுகனையாகும் இது. ஏவுகனைச் சோதனையின்போது பாதுகாப்புத் துறைஆலோசகர் வி.கே.ஆத்ரே உள்பட பலர் உடன்இருந்தனர்.
முதல் பிருத்வி சோதனை, 1988-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி நடந்தது. ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் தளத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு 1992-ம் ஆண்டு மே 5-ம் தேதி முதல் சந்திப்பூரில் இந்தச் சோதனை நடந்து வருகிறது.
250 கிலோமீட்டர் தூரம் வரை ஏவப்படக்கூடிய, எந்த வகை ஆயுதங்களையும் எடுத்துச் செல்லப்படும் வகையில் பிருத்வி வடிவமைக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.