தமிழகத்தில் இன்று
தமிழர்களுக்கு தனிமாநிலம் தரலாம் என்கிறார் நல்லகண்ணு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
இலங்கையில் தமிழர்களுக்கு தனி மாநிலம் அமைக்கவேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநல செயலாளர் ஆர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய நல்லகண்ணு, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு, அதிக சலுகைகள் வழங்கப் போவதாக இலங்கை அதிபர் சந்திரிகாஅறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கு புத்த சாமியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். தமிழர்களுக்கு சலுகை அளிப்பதில் குறுக்கிடும் போக்கை புத்த சாமியார்கள் கைவிட வேண்டும்.இலங்கையில் அதன் இறையாண்மை க்கு உட்பட்டு அதிகாரங்கள் கொண்ட தனி மாநிலம் அமைக்க வேண்டும்.
இலங்கையில் இருந்து அகதிகளாக , வெளியேறும் தமிழர்கள் கடல் திட்டுக்களில் இறக்கி விடப்படுகிறார்கள். இதனால் அவர்கள் அங்கு பட்டினியால்வாடுகிறார்கள்.
இந்தக் கொடுமையில் இருந்து தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் நல்ல கண்ணு.












Click it and Unblock the Notifications