தமிழகத்தில் இன்று
அரசியல் தீர்வு குறித்து அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் கருத்துவேறுபாடு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு முடிவு காண்பதற்கான அரசியல் தீர்வு குறித்துஆளுங்கட்சிக்கும், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையேகருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
அரசியல் தீர்வு தொடர்பான திட்டங்களை முதலில் விடுதலைப் புலிகளிடம் கொடுத்துஅவர்களின் சம்மதத்தைப் பெற வேண்டும். அதன் பிறகே, நாடாளுமன்றத்தில்சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது. ஆனால்நாடாளுமன்றத்தில்தான் நேரடியாக சமர்ப்பிக்கப்படும் என்று அரசுத் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழர் பிரச்சினைக்கு முடிவு காணும் வகையில், வடக்கு, கிழக்குமாகாணங்களை இணைத்து இடைக்கால கவுன்சில் அமைக்க அரசுத்திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தீர்வுத் திட்டங்களை விடுதலைப் புலிகளிடம் கொடுத்தால், அதனால் காலவிரையம் ஏற்படும் என்று ஆளுங்கட்சி நினைக்கிறது. எனவே முதலில்நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விட்டு, அதன் பிறகு விடுதலைப் புலிகளின்சம்மதத்தைப் பெறலாம் என்று அரசு நினைக்கிறது.
இதற்கிடையே, இரு மாகாணங்களையும் இணைத்தது தேவையா, இல்லையா என்பதுகுறித்து கிழக்கு மாகாணத்தில், மூன்று வருடங்களுக்குப் பிறகு கருத்துக் கணிப்பு நடத்தஅரசுத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தக் கருத்துக கணிப்பை வடக்கு மாகாணத்திலும்நடத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.
அதேசமயம், மாகாண இணைப்பு அல்லது அரசியல் தீர்வு குறித்து திரிகோனமலை,மட்டக்களப்பு ஆகிய சில இடங்களில் மட்டும் கருத்துக் கணிப்பு நடத்தவும் ஐக்கியதேசியக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லீம்கள் தங்களுக்கென தென்கிழக்கு மாகாணக் கவுன்சில் அமைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். இலங்கைமுஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான அஷரப் இக்கோரிக்கையைவிடுத்துள்ளார்.
அக்கறைப்ப்ட்டு, கல்முனி, பொட்டுவில், அம்பாரா ஆகிய இடங்களை இணைத்துஇந்த கவுன்சில் அமைக்கலாம் என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications