தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

டெல்லியில் 2 இடங்களில் குண்டுவெடித்-து 2 பேர் பலி-11 பேர் காயம்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:

டெல்லி செங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 8 வயது சிறுமி உள்பட இரண்டு பேர் இறந்தனர். 11 பேர்படுகாயமடைந்தனர்.

டெல்லி போக்குவரத்துக் கழகத்தில் உள்ள விசாரணைக் கவுண்டருக்கு எதிரில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.28 மணிக்கு சக்திவாய்ந்த வெடிகுண்டுவெடித்தது. இச்சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து 5 நிமிட இடைவெளியில் அங்கிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜூம்மா மசூதி அருகேயுள்ள குப்பைத்தொட்டி ஒன்றில் குண்டு வெடித்தது.இதில் ஒருவர் காயமடைந்தார்.

விபத்தில் இறந்த வாலிபர் குறித்த விபரங்கள் எதுவும் தெரியவில்லை. இதில் இறந்த 8 வயதுச் சிறுமி சீமா என்றும், டெல்லியின் வடகிழக்குப்பகுதியான ஜஹாங்கீர்புரி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

காயமடைந்த 11 பேரும் லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேரின் நிலை மிகவும்கவலைக்கிடமாக உள்ளது.

வெடிகுண்டு வெடித்தபோது விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்த அனைவரும் டெல்லி போக்குவரத்துக் கழகத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபஸ்சின் உள்ளே அமர்ந்திருந்தனர்.

இச்சம்பவத்தில் பஸ் உடைந்து நொறுங்கியது. போக்குவரத்துக் கழகத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.

வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய்ப்படையினர் சம்பவ இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு வரும் அனைத்து வாகனங்களையும் போலீசார் பலத்த சோதனை செய்த பிறகேஅனுப்புகின்றனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+