தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இங்கிலாந்துக் கடற்கரையில் ஒதுங்கிய 58 பேரின் சடலங்கள்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டோவர் (இங்கிலாந்து):

இங்கிலாந்திலுள்ள டோவர் துறைமுகத்தில் அடைக்கலம் தேடி இங்கிலாந்து வந்த 58 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் புகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

டோவர் துறைமுகத்தின் பின்புறம் நள்ளிரவில் இந்த உடல்கள் கிடப்பது தெரிய வந்தது. பிணங்களின் மத்தியில் 2 பேர் மயங்கிய நிலையில் கடந்தனர். அவர்களைமருத்துவமனையில் அனுமதித்தனர்.

இறந்து கிடந்தவர்கள் யார் என்ற விபரம் உடனடியாய்த் தெரியவில்லை. அவர்கள் புகலிடம் தேடி வந்தவர்கள் என்று மட்டும் தெரிகிறது. சுங்கத்துறை அதிகாரிகளும், போலீசாரும் நள்ளிரவில்தான் இவர்களது சடலங்களைக் கண்டுபிடித்தனர்.

இங்கிலாந்து துறைமுகம் ஒன்றில் இதுபோல் அதிக எண்ணிக்கையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது இதுவே முதல்முறை. சடலங்களை இறக்கிவிட்டுவிட்டுதப்பித்துச் செல்ல முயன்ற லாரி டிரைவரைப் போலீசார் கைது செய்தனர். அவரைப் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மயக்கமடைந்த நிலையில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை. அவர்கள் சாதாரண நிலைக்குத் திரும்பிய பிறகே, விசாரணை நடத்த முடியும். அதன்பிறகுதான் என்ன நடந்தது என்று தெரிய வரும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+