தமிழகத்தில் இன்று
கோவை போலீஸ்காரர் கொலை: குற்றப் பத்திரிகை வாங்க 8 பேர் மறுப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
போலீஸ்காரர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் குற்றப்பத்திரிக்கைநகல்களை வாங்க மறுத்து விட்டனர்.
கோவையில் கடந்த 1997-ம் ஆண்டு நவம்பர் மாதம் டிராபிக் போலீஸ்காரர்செல்வராஜ் உக்கடம் பகுதியில் பணியில் இருந்த போது கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்குத் தொடர்பாக அன்சாரி, சித்திக் அலி மற்றும் தடா அஸ்லாம் உட்பட 8பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் திங்கள்கிழமை இவர்கள்அனைவரும் கோவை மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 5 ல் ஆஜர் செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் வழங்குவதற்காகஅவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைத்திருந்தனர். ஆனால் இவர்கள் அனைவரும்வேலூர் சிறையில் கடுமையான முறையில் அடைத்து வைக்கப்பட்டதைக் கண்டித்தும்,தாங்கள் குற்றவாளிகள் இல்லை எனக் கூறியும் இந்த நகல்களை வாங்க மறுத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications