correspondence and distance education

Subscribe to Oneindia Tamil

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">அஞ்சல் வழிக் கல்வி என்பது வயது வந்தோர்க்கும், பெண்களுக்கும், வேலைக்குச்செல்பவர்களுக்கும் பெரிய வரப்பிரசாதமாகும்.

கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நேரடியாகச் சேர்ந்து பட்டப் படிப்பு படிக்கமுடியாதவர்களும், படிக்க முடியவில்லையே என்று ஏங்குபவர்களும் பல்கலைக்கழகங்களின் அஞ்சல் வழிக் கல்வியில் சேர்ந்து பயன் பெறலாம்.

வேலைக்குச் சென்று கொண்டும், வீட்டில் இருந்து கொண்டும் அஞ்சல் வழியில்தங்களுக்குப் பிடித்த பாடத்தைப் படித்து பின்னர் தேர்வு எழுதி அனைவராலும் பட்டம்பெறமுடியும். அந்த வசதியை பல்கலைக் கழகங்கள் ஏற்படுத்தித் தந்துள்ளன.

கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நேரடியாகச் சேர்ந்து படிப்பதற்குஇணையாக அஞ்சல் வழிக் கல்வி மூலம் தரமான, சிறந்த கல்வியை அனைவரும் பெறமுடியும்.

இந்தியாவில் ஏறத்தாழ 68 பல்கலைக் கழகங்களில் அஞ்சல் வழிக் கல்விஅளிக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னைப் பல்கலைக் கழகம், மதுரை காமராஜர்பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக் கழகம்,அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அழகப்பா பல்கலைக் கழகம், இந்திரா காந்திதேசிய திறந்தவெளிப் பல்கலைக் கழகம் போன்றவற்றில் அஞ்சல் வழிக் கல்விஅளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள மேற்கண்ட பல்கலைக் கழகங்களில் அளிக்கப்படும் அஞ்சல் வழிக்கல்வி முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். தொழிற் கல்வி மற்றும்வேலைவாய்ப்புக்கான சிறப்புப் பாடங்களைத் தேர்ந்தெடுத்து படித்துப்பயன்பெறலாம்.

அஞ்சல் வழிக் கல்வி அளிக்கும் தமிழகப் பல்கலைக் கழகங்கள் விவரம்:

1. சென்னைப் பல்கலைக் கழகம்.

2. மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்.

3. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.

4. இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக் கழகம்.

5. பாரதிதாசன் பல்கலைக் கழகம்.

6. பாரதியார் பல்கலைக் கழகம்.

7. அன்னை தெரசா பல்கலைக் கழகம்.

8. அழகப்பா பல்கலைக் கழகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+