துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர்களுக்கு அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் நோட்டீஸ்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">அலிகர்:
நுழைவுத் தேர்வின்போது கண்காணிப்பாளரைத் தாக்கியது மட்டுமல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்றுமாணவர்களுக்கு அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அலிகர் பல்கலைக் கழகத்தில் ஜூன் 14-ம் தேதி எம்.பி.ஏ. படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில்கலந்து கொண்ட மாணவர்கள் 3 பேர் காப்பி அடித்ததாகவும், அதை தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சிலர், கண்காணிப்பாளரைத் தாக்கியது மட்டுமல்லாமல், பிடிக்க வந்தபல்கலைக் கழக ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில்தப்பிவிட்டனர்.
விசாரணையில் அவர்கள் பெயர் பரூக் ஆஸம், ஷார்பி அலி கான், தஷீன் சித்திக் என்று தெரியவந்தது. நுழைவுத்தேர்வின்போது முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாதுஎன்று கேட்டு மாணவர்களுக்கு அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நோட்டீஸுக்குப் பதிலளிக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஎச்சரிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications