தந்தையின் மரணத்தால் ஒலிம்பிக் சுடரை ஏந்-திச் செல்லும் வாய்ப்பை இழந்த மகன்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சிட்னி:
சிட்னி-2000 ஒலிம்பிக் போட்டியின் சுடரை எடுத்துச் செல்லும் நல்ல வாய்ப்பை தந்தையின் மரணத்தால் இழந்தார்மகன். ஆஸ்திரேலியாவில் இச் சம்பவம் நடந்தது.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் வரும் செப்டம்பர் மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.அதற்காக, உலகில் உள்ள 5 கண்டங்களில் உள்ள பல்வு நாடுகளின் வழியே ஒலிம்பிக் சுடர் எடுத்துச் செல்லப்பட்டபோட்டி துவக்க நாளன்று ஒலிம்பிக் ஜோதி ஏற்றி வைக்கப்படும்.
பல்வேறு நாடுகளில் வழியே ஒலிம்பிக் சுடரை எடுத்துச் செல்ல அந்தந்த நாட்டைச் சேர்ந்த நபர்களுக்குவாய்ப்பளிக்கப்படும். இந்த அறிய, நல்ல வாய்ப்பைப் பெற பலர் போட்டிபோடுவார்கள்.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பகுதியின் வழியே தற்போது ஒலிம்பிக் சுடர் எடுத்துச்செல்லப்படுகிறது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள கிளாட்ஸ்டோன் நகரின் வழியே ஒலிம்பிக் சுடரை எடுத்துச்செல்ல 43 வயதான அக்கவுண்டன்ட் பீட்டர் சிம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனக்குக் கிடைத்த வாய்ப்பை தனது மகன் டேனியலுக்குவழங்கியிருந்தார். செவ்வாய்க்கிழமை காலை ஒலிம்பிக் சுடரை டேனியல் எடுத்துச் செல்லவிருந்தார். ஆனால்,அதற்கு முன்பே பீட்டர் சிம்சன் இறந்துவிட்டார். இதனால், தந்தையின் இறுதிச் சடங்கை செய்ய வேண்டிய கட்டாயநிலைக்கு ஆளான டேனியல், ஒலிம்பிக் சுடரை எடுத்துச் செல்ல முடியவில்லை.
அவருக்குப் பதிலாக சிம்சனின் சக ஊழியர் ஒருவர் ஒலிம்பிக் சுடரை எடுத்துச் சென்றார்.












Click it and Unblock the Notifications