தமிழகத்தில் இன்று
இலவச போன் பெறும் ஊழியர்கள் வருமான வரி கணக்கு காட்ட வேண்டும்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
3.5 லட்சம் தொலைத் தொடர்புத் துறை ஊழியர்களுக்கு இலவச தொலைபேசி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, வருமான வரித்துறைக்கு நல்லபலனைக் கொடுத்துள்ளது.
தொலைத் தொடர்புத் துறை ஊழியர்கள் 3.5 லட்சம் பேருக்கு இலவச தொலைபேசி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதையடுத்து வருமானவரித்துறையின் வலையமைப்பு விரிவாகியுள்ளது.
சட்டப்படி, தொலைபேசி வைத்திருக்கும் அனைவரும் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, இலவச தொலைபேசி பெறும் அனைத்துத்தொலைத் தொடர்புத் துறை ஊழியர்களும், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, தங்களது சொத்து மதிப்பையும் அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் விஷ்வபந்து குப்தா இதுகுறித்துக் கூறுகையில், இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும் 150 இலவச தொலைபேசிகால்களுக்கான கட்டணத்தில் 30 சதவீதத்தை வருமான வரியாகவும் இவர்கள் கட்ட வேண்டும் என்றார் குப்தா.
தொலைத் தொடர்புத் துறை ஊழியர்களுக்கு இலவச தொலைபேசி வழங்கும் திட்டத்தை மத்தி தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்அறிவித்தபோது, அதற்கு நிதியமைச்சரும், பிரதமரின் அலுவலகமும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்தத் திட்டத்தால், மத்திய அரசுக்குக் கூடுதலாக ரூ. 1200 கோடி செலவாகும் என்று நிதியமைச்சர் கருத்து தெரிவித்தார். இதையடுத்து பாஸ்வானுக்கும்,நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் வாஜ்பாய், இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications