தமிழகத்தில் இன்று
வி-ரு-து-ந-கர் to மானா-ம-து-ரை: பிராட்கேஜ் ரயில் வ-ரு-மா?
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
விருதுநகரில் இருந்து கொல்லத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கப்படுவதால், விருது-நக-ரில் இருந்து மானாமதுரைக்கும் அகலரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் மதி-முக பொதுச்செயலாளர் வைகோவலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை வைகோ வெளியிட்ட அறிக்கை:
விருதுநகர் - கொல்லம் அகல ரயில் பாதை பணிகளை மேற்கொள்வதற்காக கொல்லம் ரயில் தற்போது நிறுத்தப்பட இருப்பதாகரயில்வே -நிர்வாகம் தெ-ரிவித்துள்ளது. இத்திட்டப் பணிகளை -வே-க-மா-க ந-டத்-த-வும், மேற்பார்வையிடுவதற்கும் ரயில்வேஅமைச்சர் மம்தா பானர்ஜி ஜூலை 3ம் தேதி வரவிருந்த -நிகழ்ச்சி, மேற்கு வங்கத்தில் அமைச்சர்கள் பங்கேற்கவிருக்கும் -நிகழ்ச்சிகாரணமாக மாற்றி வைக்கப்படுகிறது.
தற்போது விருதுநகருக்கும், மானாமதுரைக்கும் இடையே பாசஞ்சர் ரயிலை ஓட்ட வேண்டுமென்று ரயில்வே அமைச்சரிட-மும்,தெற்கு ரயில்வே -நிர்வாகத்திடம் -நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அந்த வேண்டுகோளை ஏற்று பாசஞ்சர் ரயிலைமானாமதுரைக்கும், விருது-நகருக்கும் இடையில் ஓட்டுவதற்கு ரயில்வே -நிர்வாகம் -முடிவு செய்திருக்கிறது.
அருப்புக்கோட்டை உள்பட மானாமதுரை வரையில் உள்ள எந்த ரயில் நிலைய-மும் -மூடப்படமாட்டாது என்று ரயில்வேஅமைச்சரும், ரயில்வே -நிர்வாக-மும் என்னிடம் உறுதியளித்துள்ளனர்.
விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரைக்கு அகல ரயில் பாதை அமைக்க வேண்டுமென்று ரயில்வேஅமைச்ச-ரிடம் தொடர்ந்து -நான் வலியுறுத்தி வருகிறேன். தற்போது திருச்சியிலிருந்து மானாமதுரைக்கு அகல ரயில் பாதைத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகரிலிருந்து கொல்லத்துக்கு அகல ரயில் பாதை அமைக்கப்படுவதால், விருது-நக-ரிலிருந்து மானாமதுரைக்கும் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டால் தான் தென் மாவட்ட மக்களுக்கு இந்தத் திட்டம் பயனளிக்கும் என்பதையும் ரயில்வே அமைச்ச-ரிடம்வற்புறுத்தியுள்ளேன்.
ரயில்வே அமைச்சரும், ரயில்வே நிர்வாக-மும் கொள்கையளவில் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். மேற்கூறிய இரண்டுதிட்டங்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தையும் -நிறைவேற்றுவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். வருகிற -நிதியாண்டில் இந்தத்திட்டத்தை ரயில்வே அமைச்சர் -நிறைவேற்றுவார் என்று -நம்புகிறேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.