For Quick Alerts
For Daily Alerts
Just In
மேட்ச் பிக்ஸிங்: அஜித் வடேகரிடம் சிபிஐ மீண்டும் விசாரணை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் தலைவரும், மேனேஜருமான அஜித் வடேகரிடம்மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் இந் நாள் வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சமீம காலமாககுற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. முதலில் குற்றச்சாட்டுகளைக் கூறிய மனோஜ் பிரபாகர், தான் கூறியகுற்றச்சாட்டுகளுக்கு சில ஆதாரங்களை வெளியிட்டார். மேலும், சில அதிகாரிகள் மற்றும் வீரர்களின்பெயர்களையும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து பிரபாகர் கூறிய நபர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக சித்துவிடம் விசாரணைநடத்திய சிபிஐ, அடுத்து வடேகரிடம் விசாரணை நடத்தியது. புதன்கிழமை மீண்டும் வடேகரிடம் சிபிஐ விசாரணைநடத்தியது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, May 19, 2000, 5:30 [IST]