தமிழகத்தில் இன்று
--தாழ்த்-தப்-பட்-டே-ார் கொலை: சிபி-ஐ விசார-ண கேட்--கும் வி-டு-த-லை சிறுத்-தை-கள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தலித் படுகொலைகள் கு-றித்-து சி.பி.ஐ. விசாரணை கேட்டு சென்னையில் 23ம் தேதி பேரணி நடத்த விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கடலூர் மாவட்டம் புளியங்குடியில் நடந்த மூன்று தலித்துகள் படுகொலை சம்பவத்தை திசை திருப்பப் பார்க்கின்றனர்.தலித்து-களே தலித்தை படுகொலை செய்ததாக திசை திருப்புவது, -நடந்த படுகொலையை விட மோசமானது.
இம்மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 19 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவை அனைத்துக்கும்சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி 23ம் தேதி சென்னையில் பேரணி -நடத்துகிறோம்.
இப்பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாக கூறுவது விஷமப் பிரச்சாரம்.இந்த பேரணிக்கு முறையான அனுமதிபெறப்பட்டுள்ளது. நீதிக் கட்சியின் முன்னோடித் தலைவராக இருந்தவர் இரட்டைமலை சீனிவாசன். அவருக்கு சென்னையில்வெண்கல சிலை அமைக்க வேண்டும். இது வேண்டுகோள் தானே தவிர, கெடு அல்ல.
விருதுநகர் அருகே புதுப்பட்டியில் தலித்துகளை மதமாற்றும் -முயற்சியில் ஆர்.எஸ்.எஸ்.போன்ற மதவாத அமைப்புகள்ஈடுபட்டுள்ளன. இதனால் வன்முறை ஏற்பட்டு வருகிறது. அதை தடுக்க வேண்டும்.
இந்தியாவே கடனாளி நாடாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் நாம் இலங்கைக்கு 450 கோடி ரூபாய் கொடுக்க வேண்டுமா?என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications