தமிழகத்தில் இன்று
செப்டம்பரில் தமிழக காங். தலைவர் தேர்தல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் செப்டம்பர் மாதம் நடக்கும் என்று எம்பி.மணிசங்கர அய்யர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இளங்கோவனை சோனியாகாந்தி நியமித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்குத் திறமையான தலைவர் இளங்கோவன்.அவரது தலைமையை நான் வரவேற்கிறேன். திண்டிவனம் ராமமூர்த்தியைத் தவிர யாரும் இவரது நியமனத்தை எதிர்க்கவில்லை.
செப்டம்பர் மாதம் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தேர்தல் நடைபெறும் என்று கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் ராம்நிவாஸ் மிர்தா அறிவித்துஉள்ளார். தமிழ்நாட்டிலும் கட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. முதலில் அடிமட்ட கட்சி தேர்தல் நடத்தப்படும். அதன்பிறகு மாநில அளவில் தேர்தல்நடைபெறும்.
செப்டம்பர் 30 ந்தேதி தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. அப்போது போட்டியில்லாமல் இளங்கோவன்தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்புகிறேன். அப்படி யாராவது போட்டியிட்டாலும் இளங்கோவன்தான் வெற்றி பெறுவார்.
கட்சியைப் பலப்படுத்த வேண்டும்: தேர்தல் கூட்டணியை முடிவு செய்வதற்குள் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். புதிய தலைவர்இளங்கோவன் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று கட்சி உறுப்பினர்களை சந்தித்து வருகிறார். மதுரை, தூத்துக்குடிக்கு இதுவரை சென்றுள்ளார்.இன்னும் பல மாவட்டங்களுக்குச் சென்று கட்சியைப் பலப்படுத்த வேண்டும்.
நல்ல உறவு: அதிமுக தலைவர் ஜெயலலிதா, தாமக தலைவர் மூப்பனாருடன் இளங்கோவன் சுமூக உறவு வைத்துக்கொள்ள வேண்டும்.
இலங்கைப் பிரச்சனை குறித்து வைகோ போன்றவர்கள் கூறும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்து என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறுவது தவறு.ஏனெனில் பாரதிய ஜனதாக் கட்சியில்தான் அந்தக் கட்சிகள் உள்ளன.












Click it and Unblock the Notifications