தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

தள்ளுவண்டிக்காரர் மகளின் தமிழ் சாதனை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த தள்ளுவண்டிக்காரரின் மகள் பத்தாம் வகுப்புத்தேர்வில், தமிழ் பாடத்தில் தமிழகத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார்.

மேலூர் ஸ்ரீசுந்தரேஸ்வரா வித்யாலயம் மேல் நிலைப் பள்ளியில் படித்தவர் அமுதா.இந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு மெட்ரிக்குலேஷன் தேர்வில் தமிழ் பாடத்தில்200-க்கு 192 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளார்.

1200க்கு 1055 மதிப் பெண்கள் பெற்றுள்ள அமுதாவின் தந்தை ஒருதள்ளுவண்டிக்காரர் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அமுதாவும்காலையில் பள்ளி சென்று வந்த பிறகு அக்கம் பக்கத்து வீடுகளில் டியூஷன் சொல்லிக்கொடுப்பார். இதற்காக அவர் பணம் வாங்குவதில்லை. இலவசமாகத்தான் டியூஷன்எடுக்கிறார்.

அமுதாவின் தந்தை தள்ளுவண்டியில் சென்று மிக்சர் விற்று வருகிறார். இவருக்குஉதவியாக அமுதாவும் சில நேரங்களில் வியாபாரத்தின்போது உடன் இருப்பார்.

தனது மகள் முதலிடத்தில் வந்தது பற்றி அமுதாவின் தந்தை முத்துமணி கூறுகையில்,அமுதா படிக்கும் போதெல்லாம், உனது போட்டோ பத்திரிகையில் வரும் வகையில்படித்துத் தேற வேண்டும் என்று கூறிக் கொண்டேயிருப்பேன். அதை இப்போது அமுதாநிறைவேற்றியிருக்கிறார்.

எனது தினசரி வருமானம் ரூ. 50தான். இதை வைத்துக் கொண்டு அமுதாவைமேல்படிப்பு படிக்க வைப்பது சிரமம். அரசுதான் உதவ வேண்டும் என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+