தமிழகத்தில் இன்று
ஈழத் தமி-ழர் மாநாடு நடத்தக் கோருகிறார் ராமதாஸ்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
இலங்கைப் பிரச்சினையில் நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்க்க தமிழீழஆதரவாளர்கள் அமைப்பின்(டெஸோ) மாநாட்டை முதல்வர் கருணாநிதி கூட்டவேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரச்சினை குறித்து மதிமுக தலைவர் வைகோவும், பாமக தலைவர் டாக்டர்ராமதாசும் நாளுக்கொரு கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழீழ ஆதரவுத்தலைவர்களான இவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அனைத்தும் திமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.
இப்பின்னணியில் தமிழீழ ஆதரவாளர்கள் மாநாட்டை கருணாநிதியே கூட்டவேண்டும் என்று ராமதாஸ் ஆலோசனை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:
இலங்கைப் பிரச்சினையில் தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்தும், தமிழர்களுக்குஎதிரான இனப் படுகொலைகள் குறித்தும் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தைஈர்க்கும் வகையில் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின் மாநாட்டை கூட்ட முதல்வர்கருணாநிதி முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின் மாநாடு மதுரையில் 1980ம் ஆண்டு மத்தியில்நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் வாஜ்பாய் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள்பங்கேற்றனர். அதே போன்றதொரு மாநாட்டை இப்போது நடத்த வேண்டும்.
இலங்கைப் பிரச்சினை குறித்து சில தலைவர்களுக்கு அறவே தெரியவில்லை.இலங்கைத் தமிழ் சமுதாயத்தின் வரலாறு தெரியாமல் அவர்கள் அறிக்கைவெளியிடுகின்றனர். அவர்களின் சொந்த கற்பனையைத்தான் அதில் காட்டுகின்றனர்.அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர் அவர்கள் இலங்கைத் தமிழர் வரலாற்றைபடித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், இலங்கைப் பிரச்னையில் கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்கள் கருத்தைபகிர்ந்து கொள்வதற்கு வசதியாக சர்வ கட்சிக் கூட்டத்தை கூட்டலாம். அதற்கும்முதல்வர் கருணாநிதி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியொரு கூட்டம்இலங்கைப் பிரச்னையில் தமிழக கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கஉதவும் என்பது என் கருத்து என்றார் ராமதாஸ்.