தமிழகத்தில் இன்று
"சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த மத்திய நிதியுதவி வேண்டும்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழகத்தின் சுற்றுலா மையங்களான மாமல்லபுரம், தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரிஆகிய இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக நிதியுதவி அளிக்கவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய சுற்றுலாத் துறைச் செயலாளர் எம்.பி.பேஸ்பருவா சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஏ.பி.முத்துசாமி, சுற்றுலாத்துறைச் செயலாளருடன் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள் பற்றி ஆலோசனை நடத்தினார்.
அப்போது தமிழகத்தில் சுற்றுலாத்தலங்களாக உள்ள மாமல்லபுரம், தஞ்சை, மதுரை,கன்னியாகுமரி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான அடிப்படைவசதிகளை செய்வற்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று தமிழகஅரசின் தலைமைச் செயலாளர் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு கோடி ரூபாய் வீதம் நிதியுதவி செய்யப்பட வேண்டும்என்று அவர் கோரினார்.
இந்த கோரிக்கை குறித்து பதிலளித்த பேஸ் பரூவா, இதற்கான திட்டங்களை மத்தியஅரசுக்கு அனுப்பி வைக்கும்படியும், மத்திய நிதியுதவி தமிழகத்திற்கு அவசியம்என்றும் கருத்து தெரிவித்தார்.
கொள்கை அளவில் மத்திய நிதியுதவி தமிழகத்திற்கு அவசியம் என்பதை ஒத்துக்கொண்டாலும், எந்தெந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்என்பதை தமிழக அரசு தான் தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.
மேலும் சுற்றுலா வளர்ச்சிக்கென தனி நிதி ஒன்றை ஏற்படுத்த மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது என்றார்.