தமிழகத்தில் இன்று
அமெரிக்காவை மீண்டும் கலக்-கும் சீன உளவாளிகள் பயம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">வாஷிங்டன்:
அமெரிக்காவில் சீன உளவாளிகள் குறித்த பயம் மீண்டும் தலை தூக்கியுள்ளது.
சீன செய்தி நிறுவனமான ஸின்ஹுவா, அமெரிக்க ராணுவத் தலைமையகமானபென்டகனுக்கு அருகே இடம் ஒன்றை வாங்கியுள்ளது. இதற்கு அமெரிக்க அரசின்அனுமதியை ஸின்ஹுவா நிறுவனம் பெறவில்லை. இதன் காரணமாகவே சீனஉளவாளிகள் மீண்டும் அமெரிக்காவில் உளவு வேலையில் ஈடுபட்டுள்ளனரோ என்றசந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,ஸின்ஹுவா செய்தி நிறுவனம் இடம் வாங்கியுள்ளது தொடர்பாக ஏன் அரசிடம்தெரிவிக்கவில்லை என்று சீன தூதரகத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம்.
பென்டகன் அருகே நிலம் வாங்கியது தொடர்பாக அமெரிக்க அரசின் ரியல் எஸ்டேட்சட்டம் கடைப்பிடிக்கப்படவில்லை. நிலம் வாங்குவது தொடர்பான அனைத்துப்பணிகளும் முடிந்து விட்டதாகத் தெரிகிறது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி எம்.பி. டானா ரோஹ்ராபாச்சர் கூறுகையில்,ஸின்ஹுவா, வெறும் செய்தி நிறுவனமாக மட்டும் இருந்தால், பரவாயில்லை. அரசுடன்மிக நெருக்கமான தொடர்பு ஸின்ஹுவாவுக்கு உள்ளது. அமெரிக்க ராணுவத்தலைமையகத்தின்அருகிலேயே இடம் வாங்கியிருப்பதுதான் கவலை தருவதாக உள்ளது.
பென்டகனில் நடைபெறுவதை மிக அருகில் இருந்து சீனா, உளவு பார்க்கும் வாய்ப்புஇப்போது அதிகரித்துள்ளது என்றார் அவர்.
ஸின்ஹுவா ஆட்கள் மூலம் சீனா உளவு பார்க்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவில்லைஎன்று அமெரிக்க உளவுத் துறை அதிகாரி தெரிவித்தார். கடந்த பல ஆண்டுகளாகவே,அமெரிக்காவில், சீனா உளவு வேலையை மேற்கொண்டிருப்பதாக அமெரிக்கா கருதுகிறது.
இதற்கிடையே, பென்டகன் செய்தித் தொடர்பாளர் கென்னத் பாகன் கூறுகையில்,ஸின்ஹுவா இடம் வாங்கியது தற்செயலானது போலத் தெரியவில்லை. தேவைப்பட்டால்,இடம் வாங்கியதை ரத்து செய்ய வெளியுவுறவுத் துறைக்குப் பரிந்துரை செய்வோம்என்றார்.












Click it and Unblock the Notifications