For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரோ 2000 கால்பந்து - நாளை கால் இறுதிப் போட்டிகள் ஆரம்பம்

By Staff
Google Oneindia Tamil News

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஆம்ஸ்டர்டாம்:

ஈரோ 2000 கால்பந்துக் கோப்பைக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் கால்இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டன.

போர்சுகல், துருக்கி, இத்தாலி, ருமேனியா, ஹாலந்து, யுகோஸ்லாவியா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய 8 நாடுகள்கால்இறுதி ஆட்டங்களுக்குத் தகுதி பெற்றுவிட்டன.

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 16 நாடுகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள 4நாடுகள் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடின. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பெற்றநாடுகள் கால் இறுதி ஆட்டங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ஏ பிரிவிலிருந்து போர்சுகல், ருமேனியா, பி பிரிவிலிருந்து இத்தாலி, துருக்கி, சி பிரிவிலிருந்துஸ்பெயின், யுகோஸ்லாவியா, டி பிரிவிலிருந்து ஹாலந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கால் இறுதி ஆட்டகளுக்குத்தகுதி பெற்றுள்ளன.

நடப்பு சாம்பியனான ஜெர்மனி, 1994-ம் ஆண்டு ஈரோ சாம்பியனான டென்மார்க், ஈரோ 2000 கோப்பையைஹாலந்து நாட்டுடன் இணைந்து நடத்தும் பெல்ஜியம், ஸ்வீடன், இங்கிலாந்து போன்ற திறமையான அணிகள் கால்இறுதியை எட்டத் தவறிவிட்டன.

குறிப்பாக, டென்மார்க் அணி தான் கலந்து கொண்ட 3 ஆட்டங்களிலும் தோற்றது மட்டுமல்லாமல் ஒரு கோல் கூடபோடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை இரு கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டத்தில் போர்சுகல் அணியும் துருக்கிஅணியும் மோதுகின்றன. ஆம்ஸ்டர்டாம் நகரில் இந்த ஆட்டம் நடைபெற உள்ளது.

இரண்டாவது ஆட்டத்தில் ருமேனியாவும் இத்தாலியும் மோதுகின்றன. பிரஸ்ஸல்ஸ் நகரில் இந்த ஆட்டம்நடைபெற உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் ஹாலந்து அணி யுகோஸ்லாவியாவையும், ஸ்பெயின்அணி பிரான்ஸையும் எதிர்த்து விளையாட உள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X