தமிழகத்தில் இன்று
ஆஸ்திரேலியாவில் ஹோட்டலில் தீ: 18 பேர் பலி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சிட்னி:
ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தங்கியிருந்த 18 சுற்றுலாப்பயணிகள் தீயில் கருகி இறந்தனர்.
இந்தத் தீ விபத்து ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேனிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவிலுள்ள குயின்ஸ்லேன்ட் டவுனில் உள்ள ஹோட்டலில்வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்டது.
நகர மேயர் இதுகுறித்துக் கூறுகையில், இவ்விபத்தில் 18 பேர் இறந்துள்ளனர்.
இந்த விடுதியில் ஜப்பான், கொரியா, கனடா, நெதர்லாந்து, நியுசிலாந்து, பிரிட்டன் பகுதியிலிருந்து வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் தங்கியிருந்தனர்.
இவர்களில் பெரும்பாலோனோர் பக்கத்திலுள்ள தோட்டத்திலிருந்து பழம்பறிக்கும் வேலை செய்து வந்தனர்.
இத்தீவிபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாய் உயிர்தப்பியுள்ளனர். மீட்புப்பணிகள் நடந்து வருகிறது என்றார்.
தீயணைப்புப் படை வீரர் மெட்காஃப் இவ்விபத்துக் குறித்துக் கூறுகையில், வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த இரண்டு மாடிக்கட்டிடத்தில் தீ விபத்துஏற்பட்டது. சுமார் 4 மணிநேரம் போராடி நாங்கள் தீயை அணைத்தோம் என்றார்.
பிரதமர் அதிர்ச்சி:
ஆஸ்திரேலியன் பிரதமர் ஜான் ஹோவர்டு இந்தத் தீ விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications