தமிழகத்தில் இன்று
-இந்-தி-ய சிறை-யில் உள்-ள ரஷ்யர்களை விடுவிக்க கோரிக்கை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மாஸ்கோ:
புரூலியா ஆயுத வழக்கில் தண்டனை பெற்று ஜெயலில் அடைக்கப்பட்டுள்ள 5 ரஷ்யர்களை விடுவிக்க இந்தியாவிடம் ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது.
மேற்குவங்காளத்தில் உள்ள புரூலியா மீது பறந்த விமானத்திலிருந்து ஆயுதங்கள் கீழே விழுந்தன. இது தொடர்பான வழக்கில் பல குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். இவர்களை விடுவிக்கும்படி அங்கு சென்றுள்ள இந்தியவெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் ரஷ்யா கோரிக்கை விடுத்தது.
நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் வியாழக்கிழமை ரஷ்யா சென்றார். அங்கு ரஷ்ய வெளியுறவுத்துறைஅமைச்சர் செர்கி இவானோவை சந்தித்துப் பேசினார்.
அப்போது ஜஸ்வந்த் சிங்கிடம், இவானோவ் இக்கோரிக்கையை வைத்தார். இவர்களை விடுவிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். இதுகுறித்துப்பரிசீலிக்கப்படும் என்று ஜஸ்வந்த் சிங் தெரிவித்தார்.
பொருளாதாரம், வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பத் துறையில் இந்தியா - ரஷ்யா உறவு குறித்து அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
முன்னதாக ஜஸ்வந்த் சிங் ரஷ்யா துணைப் பிரதமர் விக்டர் கிறிஸ்டென்கோ வை சந்தித்துப் பேசினார்.
இலங்கை, ஈரான், அரேபிய நாடுகள், மற்றும் இந்தியாவுடன் ஏற்றுமதி, இறக்குமதியில் ரஷ்யா ஈடுபடுவது குறித்தும் அவர்கள் விவாதித்தார்கள்.முன்னதாக கிறிஸ்டென்கோ இதுகுறித்துக் கூறுகையில், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பொருளாதாரத்தில் பல கூட்டு ஒப்பந்தங்கள் செய்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜஸ்வந்த்சிங் சிங் ரேடியோ ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் ரஷ்ய தலைவர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும்,பேச்சுவார்த்தை நல்ல முன்னேற்றத்தை தருவதாகவும் தெரிவித்தார்.
ஜஸ்வந்த் சிங் ரஷ்யாவில் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்துப் பேச இருக்கிறார்.
யு.என்.ஐ.