என்-கி-றார் -"தி-ரு"

Subscribe to Oneindia Tamil

எல்லாருக்கும் சீட் உண்டு...எம்.எல்.ஏக்-க-ளுக்-கு க-ரு-ணா-நி-தி ஆ-று-தல்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

சட்டசபைத் தேர்தலில் எல்லோருக்கும் மீண்டும் "சீட் தருவேன். கவலைப்படாமல்தொகுதிப் பணிகளை கவனியுங்கள் என்று திமுக சட்டமன்ற, நாடாளுமன்றஉறுப்பினர்களுக்கு முதல்வர் கருணாநிதி அறிவுரை கூறினார்.

அடுத்த ஆண்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சியினரைத் தயார்படுத்தும்வகையில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி சென்னையில்வெள்ளிக் கிழமை கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான அன்பழகன்,பொருளாளர் ஆற்காடு வீராசாமி, மேயர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டபலர் பேசினர்.

இவர்கள் பேசிய பின்னர் இறுதியாக முதல்வர் கருணாநிதி பேசினார். அவர்பேசுகையில், ""தொகுதி வளர்ச்சிப் பணிக்கென மத்திய, மாநில அரசுகள் ஏராளமானநிதியை உங்களுக்கு ஒதுக்கியுள்ளன. அந்த நிதியை எவ்வாறு பயன்படுத்துவதுஎன்பதை தெரிந்து கொண்டு, அதை முழுமையாக செலவிடுங்கள்.

மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைத்தால் தான் தேர்தலின்போது நாம் அவர்கள் முன்போய் நிற்க முடியும். எனவே தொகுதிப் பணியை பற்றி மட்டுமே நீங்கள் அக்கறைகொள்ளுங்கள். அதை விட்டு விட்டு கூட்டணி பற்றியெல்லாம் சிந்தித்து குழப்பிக்கொள்ளாதீர்கள். கூட்டணி பற்றி நாங்கள் பார்த்துக் கொள்வோம்.

தேர்தல் நேரத்தில் கூட்டணி மாறும். அதுபற்றி கவலைப்படத் தேவையில்லை. அதோடுமீண்டும் போட்டியிட தலைவர் சீட் கொடுப்பாரோ மாட்டாரோ என்று மண்டையைபோட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். எல்லோருக்கும் மறுபடியும் சீட் தருவேன்.

எந்த எம்.எல்.ஏ. மீதும் கெட்ட பெயர் இல்லை. எனக்கு கிடைத்த தகவல்படி ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருப்பதாகதெரிகிறது. எனவே அதை பற்றி கவலைப்படாமல் இருங்கள் என்று அறிவுரை கூறிஅனைவரையும் அனுப்பி வைத்தார் முதல்வர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+