ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் 1 கோடி - ஹரியானா அரசு அறிவிப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பன்ச்குலா:
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் ஹரியானா மாநில வீரர்கள் அனைவருக்கும் ரொக்கப் பரிசு அளிக்கப்படும் என்று அம் மாநில முதல்வர் ஓம்பிரகாஷ செளதாலா அறிவித்துள்ளார்.
பன்ச்குலாவில் நடைபெற்ற ஒலிம்பிக் நாள் விழாவில் அவர் பேசியதாவது:
சிட்னியில் வரும் செப்டம்பர் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் ஹரியானா மாநில வீரர்களுக்குத் தலா ரூ. 1 கோடியும் வெள்ளிப் பதக்கம் வென்றால் ரூ.50 லட்சம், வெண்கலப்பதக்கம் வென்றால் ரூ.25 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபடும் ஹரியானா மாநில விளையாட்டு வீரர்களுக்குநாளொன்றுக்கு ரூ.500 உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பயிற்சிக் காலமும் 4 வாரமாக அதிகரிக்கப்படுகிறது.
ஹரியானா வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் விளையாட்டுப் பிரிவு விரைவில் செயல்படத் துவங்கும். அடுத்த ஆசியக் கோப்பையை நடத்த ஹரியானாமாநிலத்துக்கு வாய்ப்பளிக்கும்படி மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்றார் செளதாலா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications