தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

சிங்-கப்-பூர்: சக ஊழி-யர்-க--ளை தாக்-கிய மூன்று தமிழர்களுக்கு சிறை, சவுக்கடி

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சிங்கப்பூர்:

இந்தியாவைச் சேர்ந்த சக பணியாளர்களைத் தாக்கி அவர்களிடம் திருடியதாகக் கைதுசெய்யப்பட்ட மூன்று தமிழர்களுக்கு தலா 5 ஆண்டுக்கும் மேற்பட்ட சிறைத்தண்டனையும், 24 சவுக்கடியும் வழங்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம் ராஜா, சந்திரன் சரவணன். இருவரும் 24 வயதுஉடையவர்கள். சட்டவிரோதமாக சிங்கப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.இன்னொருவர் செல்லையா சரவணன். 23 வயதாகும் இவர் கட்டுமானத் தொழிலாளர்.மூவரும் தங்களுடன் வேலை பார்த்து வந்த இந்தியர்கள், ஒரு வங்கதேசத்தவர், ஒருஇலங்கைக்காரர் ஆகியோரை மிரட்டுவது, அடிப்பது, திருடுவது என பல செயல்களைச்செய்து வந்தனர்.

இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.தனித்து இருக்கும் இந்தியர்களை மட்டுமே தாக்கி, திருட்டுச் செயல்களில் ஈடுபடும்கும்பலில் இந்த மூன்று பேரும் அடங்குவர். ஒருவரிடம் மோதிரத்தைப் பறிப்பதற்காக,அவரது கையில், சந்திரன் பல்லால் கடித்துள்ளார் என்று கூறிய அரசுத் தரப்பு வக்கீல்,மூவருக்கும் கடும் தண்டனை வழங்க கோரினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, செல்வம், சந்திரன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுசிறையும், செல்லையாவுக்கு 5 ஆண்டு சிறையும், சவுக்கடியும் வழங்கி உத்தரவிட்டார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+