தமிழகத்தில் இன்று
காஷ்மீரில் 3 முக்கிய தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஜம்மு:
தடைசெய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 முக்கிய தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தவிர மேலும் 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தீவிரவாதிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில்பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ராஜோரி மாவட்டத்தில் தானாமண்டி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது ஒரு மறைவிடத்திலிருந்து தீவிரவாதிகள் துப்பாக்கியால்சுட்டனர். பதிலுக்குப் பாதுபாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 3 தீவிரவாதிகள் இறந்தனர்.
இறந்த மூன்று பேரும் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதிகள்என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்த ஒரு தீவிரவாதி தப்பியோடிவிட்டார். மறைவிடத்திலிருது ஏராளமானவெடி பொருட்களும், ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே, ராஜோரி மாவட்டத்தில் புதால் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள்கைது செய்யப்பட்டனர்.
யு.என்.ஐ.