தமிழகத்தில் இன்று
இப்படியும் ஒரு வளர்-ப்புத் தாய்...
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சரியாக படிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் வளர்ப்பு மகனை அடித்து உதைத்து, தலை கீழாக தொங்க விட்டு, சூடு போட்டு சித்ரவதை செய்ததில் ஏழு வயதுசிறுவன் இறந்தான். போலீசுக்கு பயந்து அந்-த வளர்ப்புத் தாயார் தலைமறைவாகி விட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நித்தம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் முனியராஜ். 40 வயதான இவர் டீக்கடை வைத்துள்ளார். இவருக்கு காளீஸ்வரன் (9),அரவிந்த் (7) என்ற இரு மகன்கள்.
வறுமையில் வாடிய முனியராஜால் மகன்களை படிக்க வைக்க முடியவில்லை. டீக் கடையில் கிடைக்கும் வருமானம் சாப்பாட்டுக்கே போதாத நிலையில்,அரவிந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் கிடந்தான். அவனை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தபோது, பரமேஸ்வரி என்ற பெண்அறிமுகமானார்.
கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சி நகரில் வசிக்கிறார். கணவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். எனவே வறுமையில் வாடிய இந்த இரண்டுபையன்களையும் தாம் அழைத்துச் சென்று வளர்ப்பதாகவும், அவர்களை படிக்க வைப்பதாகவும், முனியராஜிடம் உறுதியளித்தார்.
அதை நம்பி அவர்களும் அனுப்பி வைத்தனர். சொன்ன வாக்குப்படி சிங்கம்புணரியில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருவரையும் சேர்த்தார் அப்பெண். நல்லசாப்பாடு, பெரிய வீடு போன்றவை தந்த உற்சாகத்தில் சிறுவர்கள் இருவரும் துள்ளித் திரிந்தனர்.
கொஞ்ச நாட்கள் விட்டுப் பிடித்த பரமேஸ்வரி விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தார். இரண்டு சிறுவர்களிடமும் கடும் கோபத்தைக் காட்ட ஆரம்பித்தார்.படிக்கவில்லை என்றால் அடித்து உதைத்தார்.
எவ்வளவோ அடித்தும் சிறுவன் அரவிந்துக்கு படிப்பு ஏறவில்லை. பள்ளித் தேர்வுகளில் மிகவும் குறைந்த மதிப்பெண்களே வாங்கினான்.
இதனால் ஆத்திரமடைந்த பரமேஸ்வரி, அவனை அடித்து உதைத்தார். வீட்டு உத்திரத்தில் தலை கீழாக கட்டித் தொங்க விட்டார். "நல்லா படிப்பியா...?என்று கேட்டவாறே உடலில் சூடு போட்டார்.
வலியால் துடித்த சிறுவன் சில நிமிடங்களில் மயங்கினான். பயந்து போன பரமேஸ்வரி கயிறை அவிழ்த்து கீழே இறக்கி விட்டார். ஆனால், சிறுவன்அரவிந்த் கண் விழிக்கவே இல்லை.
பையன் இறந்து விட்டான் என்ற தெரிந்ததும் பரமேஸ்வரி தலைமறைவாகி விட்டார். தகவல் தெரிந்து அலறித் துடித்த தந்தை முனியராஜ் போலீசில் புகார்செய்துள்ளார்.
இந்-த செய்-தி கு-றித்-து உங்-கள் க-ருத்-தை அ-னுப்-ப-வும்