தமிழகத்தில் இன்று
ஆயுதங்களைக் கீழே போட முடியாது...புலிகள் மறுப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">
இடைக்கால அரசில் பங்கேற்பதற்காக ஆயுதங்களைப் போட மாட்டோம் என்று விடுதலைப் புலிகள் கூறி விட்டனர். இதனால் இலங்கை அரசின்அமைதித் தீர்வு சரிப்பட்டு வருமா என்ற சந்தேகம் வந்துள்ளது.
இலங்கை இனப்பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு வட கிழக்கு மாகாண இடைக்கால நிர்வாக கவுன்சில் அமைக்கப்படும். இதில் புலிகள் பங்கேற்கவேண்டுமானால், ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும் என அதிபார் சந்திரிகா அறிவித்தார். இதை ஏற்கமறுத்து விட்டனர்.
புலிகள் பங்கேற்காவிட்டால், இடைக்கால நிர்வாக கவுன்சிலில் பங்கேற்க மாட்டோம் என தமிழ் ஐக்கிய முண்ணனி (டி.யு.எல்.எப்) கட்சி இதைவெளிப்படையாகவே அறிவித்துள்ளது.
புலிகளை பொறுத்தவரை தனி நாடு மட்டுமே இனப்பிரச்சனைக்கு தீர்வு என கருதுவதால், இடைக்கால நிர்வாக கவுன்சில் அமைக்கப்பட்டாலும்இலங்கை அரசின் நோக்கம் நிறைவேறுமா என்பது சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.
இதற்கிடையில் யாழ்ப்பாணம், வன்னி பகுதிகளில், தொடர்ந்து வரும் தாக்குதலில், புலிகள் 10 பேர் இறந்தனர். கொழும்புத்துறையில் உள்ள புலிகளின்பதுங்கு குழிகளையும் ராணுவத்தினர் தகர்த்தனர்.












Click it and Unblock the Notifications